/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 04, 2025 06:19 AM

ஆனைமலை; பொள்ளாச்சி - வால்பாறை ரோடு, ஆழியாறு புளியங்கண்டி அருகே நேற்று காலை ரோட்டோரம், 50 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்தது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இது குறித்து, தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரம் விழுந்ததால், அந்த ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் அகற்றப்பட்ட பின், போக்குவரத்து சீரானது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பட்டுப்போன, காய்ந்த மரங்கள் குறித்து கண்டறிந்து அவற்றை அகற்றவும், அதற்கு மாற்றாக மரக்கன்றுகளை நடவு செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.