sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆசிரியர் காலனியில் மரம் வெட்டி அகற்றம்

/

ஆசிரியர் காலனியில் மரம் வெட்டி அகற்றம்

ஆசிரியர் காலனியில் மரம் வெட்டி அகற்றம்

ஆசிரியர் காலனியில் மரம் வெட்டி அகற்றம்


ADDED : ஜூன் 05, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஊழியர்கள், நன்கு வளர்ந்த புளிய மரத்தை வெட்டி அகற்றிய சம்பவம், இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பூச்சியூர் ரோட்டில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, 9வது வார்டு ஆசிரியர் காலனி பள்ளம் அருகே சுமார், 10 வயதான பத்தடி உயரமுள்ள புளியமரம் வளர்ந்து இருந்தது.

நேற்று இப்பகுதிக்கு, தூய்மை பணிக்கு வந்த நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஊழியர்கள், மரத்தை வேரோடு வெட்டி அகற்றி விட்டனர்.

இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'நன்கு வளர்ந்த புளியமரம், இப்பகுதிக்கு நிழல் தரும் மரமாக மாறும் சூழ்நிலையில், திடீரென பேரூராட்சி ஊழியர்களே வெட்டி அகற்றிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us