ADDED : மார் 14, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியை சேர்ந்தவர் கவுதம், 21, ஆட்டோ டிரைவர். இவர் மெட்டுவாவி அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர்களை பள்ளி முடித்து, தனது ஆட்டோவில் கிணத்துக்கடவு நோக்கி அழைத்து வந்தார்.
அப்போது, லட்சுமி நகர் பகுதியில், வடசித்தூரை சேர்ந்த விக்னேஷ், 31, மற்றும் அரவிந்த், 31, இருவரும் காரில் வந்து 'ஓவர் டேக்' செய்து வழிமறித்து, கவுதமிடம் காருக்கு வழி விட மாட்டியா என, தகாத வார்த்தையில் திட்டி ரகளையில் ஈடுபட்டனர். இது குறித்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் விக்னேஷ் மற்றும் அரவிந்த் இருவரும் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.