/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர்கள் இருவர் விபத்தில் பலி
/
கல்லுாரி மாணவர்கள் இருவர் விபத்தில் பலி
ADDED : ஆக 18, 2024 02:19 AM

கிணத்துக்கடவு:கோவை, எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலையில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு மாணவர் ஹரியானாவை சேர்ந்த சுமித்குமார், 21, கெமிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவர் புதுடில்லியை சேர்ந்த அக் ஷத், 20, இருவரும், விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
இரு நாட்கள் பல்கலை விடுமுறை என்பதால், நேற்று மதியம் நண்பரிடம் பைக் வாங்கி, வால்பாறை செல்வதற்கு, கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். பைக்கை சுமித்குமார் ஓட்டினார்.
கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவில் பேக்கரி அருகே நின்றிருந்த கார் மீது பைக் உரசியதில், இருவரும் நிலை தடுமாறி, பின்னால் வந்த மற்றொரு காரின் மீது சாய்ந்ததால் துாக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் இறந்தனர். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.

