/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருவழிப்பாதையில் சென்ற 4 பைக்குகள் மீது கார் மோதல் இருவர் பலி; 4 பேர் படுகாயம்
/
ஒருவழிப்பாதையில் சென்ற 4 பைக்குகள் மீது கார் மோதல் இருவர் பலி; 4 பேர் படுகாயம்
ஒருவழிப்பாதையில் சென்ற 4 பைக்குகள் மீது கார் மோதல் இருவர் பலி; 4 பேர் படுகாயம்
ஒருவழிப்பாதையில் சென்ற 4 பைக்குகள் மீது கார் மோதல் இருவர் பலி; 4 பேர் படுகாயம்
ADDED : செப் 01, 2024 01:58 AM

கிணத்துக்கடவு: திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் பாலாஜி, 28; தனியார் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்கிறார். இவர், தன் உறவினரை கோவை விமான நிலையத்தில் இறக்கி விட்டு, காரில் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்தார்.
கிணத்துக்கடவு, தாமரைக்குளம் அருகே வந்தபோது, ரோட்டில் எதிர்திசையில், மாசநாயக்கன்புதுாரைச் சேர்ந்த குமார், 51, அவரது மனைவி மரகதம், 45, ஆகியோர் ஒரு பைக்கிலும், சதீஷ்குமார், 30, தனி பைக்கிலும், பட்டணத்தைச் சேர்ந்த சம்பத்குமார், 41, பழனிசாமி, 51 ஆகியோர் ஒரு பைக்கிலும், தாமரைக்குளத்தை சேர்ந்த திருமூர்த்தி, 51, மற்றொரு பைக்கிலும் வந்தனர்.
நான்கு பைக்குகள், 'ஒன்வே'யில் வந்ததால் காரில் வந்த பாலாஜி தடுமாற்றமடைந்து, பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதினார்.
இதில், பைக்கில் வந்த அனைவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். பழனிசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். நான்கு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் தாமரைக்குளம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிக்கு செல்ல வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காரை ஓட்டிய பாலாஜி சிறு காயங்களுடன் தப்பினார்.
கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.