sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்; இரு மாணவர்கள் காயம்

/

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்; இரு மாணவர்கள் காயம்

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்; இரு மாணவர்கள் காயம்

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்; இரு மாணவர்கள் காயம்


ADDED : மார் 26, 2024 10:17 PM

Google News

ADDED : மார் 26, 2024 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:சூலுார் அருகே பள்ளத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில், இரு மாணவர்கள் காயமடைந்தனர்.

சூலுார் அருகே செயல்படும் தனியார் பள்ளியின் வேன் நேற்று காலை பீடம் பள்ளி, பட்டணம் பகுதியில், நான்கு மாணவ, மாணவியரை ஏற்றி கொண்டு, நாகமநாயக்கன்பாளையம் நோக்கி சென்றது. பாப்பம்பட்டியை சேர்ந்த கார்த்திக்,27 வேனை ஓட்டி சென்றார்.

ஜே.ஜே. நகர் பகுதியில் வேன் சென்ற போது, எதிரில் வந்த இரு சக்கர வாகனத்துக்கு வழி விட, வேனை வலது புறமாக டிரைவர் திருப்பி உள்ளார்.

அப்போது, ரோட்டின் பக்கவாட்டில் உள்ள மண் சரிந்ததால், ஏழு அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், மாணவர்கள் சஞ்சித், திவ்ய ஸ்ரீ ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நான்கு மாணவர்கள் மட்டும் இருந்ததால், அசம்பாவிதம் பெரிய அளவில் இல்லை.

டிரைவர் கார்த்திக் மீது எஸ்.ஐ., விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us