sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

/

சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : நவ 07, 2024 11:26 PM

Google News

ADDED : நவ 07, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்றாற்போல், சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், பல பகுதிகளில், சாலை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக, குடிநீர் குழாய் உடைப்பு, கசிவு ஏற்படும் போது, தார் சாலை தோண்டப்பட்டால், முறையாக சீரமைப்பது கிடையாது.

இதனால், பல பகுதிகளில், சாலை குண்டும் குழியுமாக மாறி வருகிறது. சில பகுதிகளில், சாலையில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியு-மாக காட்சியளிப்பதால், அத்தியாவசிய தேவைக்காக செல்லும் மக்கள் பாதிக்கின்றனர்.

பல பகுதிகளில், சாலையை ஆக்கிரமித்து தோட்டம் அமைப்பதையும், கார் ெஷட் அமைப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பேரூராட்சி அலுவலர்கள், அவ்வப்போது ஆய்வு நடத்தி விதிமீறலைக் கண்டறிந்து தடுப்பதுடன், சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us