sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டெங்கு காய்ச்சலுக்கு இரு ஆண்டுகளில் தடுப்பூசிகள்! உபகரணங்கள் வழங்கும் விழாவில் தகவல்

/

டெங்கு காய்ச்சலுக்கு இரு ஆண்டுகளில் தடுப்பூசிகள்! உபகரணங்கள் வழங்கும் விழாவில் தகவல்

டெங்கு காய்ச்சலுக்கு இரு ஆண்டுகளில் தடுப்பூசிகள்! உபகரணங்கள் வழங்கும் விழாவில் தகவல்

டெங்கு காய்ச்சலுக்கு இரு ஆண்டுகளில் தடுப்பூசிகள்! உபகரணங்கள் வழங்கும் விழாவில் தகவல்


ADDED : ஜூலை 02, 2024 02:10 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;''டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வினியோகிக்கப்படும்,'' என, இந்திய இம்யூனி நியூலாஜிக்கல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.

பொள்ளாச்சி ரோட்டரி கிளப் மற்றும் ைஹதராபாத் இந்தியன் இம்யூனி நியூலாஜிக்கல் நிறுவனம் சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, மற்றும் ரத்த வங்கி பிரிவிற்கு தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ைஹதராபாத் இந்தியன் இம்யூனி நியூலாஜிக்கல் நிறுவன, நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்தகுமார், உபகரண பொருட்களை, பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, அரசு மருத்துவமனை டாக்டர் ராஜா ஆகியோரிடம் வழங்கினார்.

நிர்வாக இயக்குனர் கூறியதாவது: ைஹதராபாத்தில், செயல்படும் எங்களது நிறுவனம் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவும் நோய்களை, 'வருமுன் காப்போம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் தடுப்பதற்கான தடுப்பூசிகளை தயார் செய்து, இந்தியா மட்டுமல்லாது, 60 வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது.தற்போது டெங்கு, சிக்குன் - குன்யா, ஜிகா வைரஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான முதல் கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெங்கு தடுப்பூசி மருந்துகள் வினிநோயகம் செய்யப்படும். மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஆராய்ச்சி பணியில் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us