sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் அறிவுறுத்தல்

/

விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் அறிவுறுத்தல்


ADDED : செப் 04, 2024 12:50 AM

Google News

ADDED : செப் 04, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்;விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, சூலுார் போலீசார் அறிவுறுத்தினர்.

வரும், 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. சூலூர் சுற்றுவட்டாரத்தில் இந்து இயக்கங்கள் சார்பில், 100க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

9ம் தேதி பொதுக்கூட்டங்கள் மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது. இதையொட்டி, சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இன்ஸ்பெக்டர் மாதையன் பேசுகையில், ''விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். பிற வழிபாட்டு தலங்களுக்கு முன், கோஷமிடவோ, இசைக்கருவிகளை வாசிக்கவோ வேண்டாம். வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது,'' என்றார். நொய்யல் ஆற்றில் கழிவு நீர் அதிகளவில் வருவதால், சூலூர் சின்ன குளத்தில் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும், என, ஹிந்து இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலித்து முடிவை தெரிவிப்பதாக போலீசார் கூறினர்.

ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார், வீர ஹிந்து சேவா நிர்வாகி கிருஷ்ணகுமார், இ.ம.க., மாவட்ட தலைவர் கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us