/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வைசாக்., - கொல்லம் சிறப்பு ரயில் திருப்பூர், போத்தனுாரில் நிற்கும்
/
வைசாக்., - கொல்லம் சிறப்பு ரயில் திருப்பூர், போத்தனுாரில் நிற்கும்
வைசாக்., - கொல்லம் சிறப்பு ரயில் திருப்பூர், போத்தனுாரில் நிற்கும்
வைசாக்., - கொல்லம் சிறப்பு ரயில் திருப்பூர், போத்தனுாரில் நிற்கும்
ADDED : செப் 07, 2024 01:45 AM
கோவை:பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விசாகப்பட்டினம்- - கொல்லம் சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூரில் நின்று செல்லும்.
விசாகப்பட்டினம்- கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 08539), வரும் நவ., 27ம் தேதி வரை புதன்கிழமை தோறும், காலை 8:20 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு, கொல்லத்துக்கு அடுத்த நாள் மதியம் 12:55 மணிக்கு சென்றடையும்.
மறுவழியில், இந்த ரயில் (எண்: 08540), வரும் நவ., 28ம் தேதி வரை, கொல்லத்தில் இருந்து, வியாழக்கிழமை தோறும் இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் இரவு, 11:20 மணிக்கு விசாகப்பட்டினத்தை அடையும்.
விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும்போது, வியாழக்கிழமைகளில், திருப்பூரை மாலை 3:30 மணிக்கும், போத்தனூரை மாலை 4:48 மணிக்கும் வந்தடையும். கொல்லத்தில் இருந்து புறப்படும்போது, வெள்ளிக்கிழமைகளில், போத்தனூரை மாலை 3:33 மணிக்கும், திருப்பூரை 4:15 மணிக்கும் வந்தடையும். இந்த அறிவிப்பை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.