sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கால்பந்து பயிற்சியாளர் பணியில் சேர வேண்டுமா?

/

கால்பந்து பயிற்சியாளர் பணியில் சேர வேண்டுமா?

கால்பந்து பயிற்சியாளர் பணியில் சேர வேண்டுமா?

கால்பந்து பயிற்சியாளர் பணியில் சேர வேண்டுமா?


ADDED : ஆக 10, 2024 10:21 PM

Google News

ADDED : ஆக 10, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கேலோ இந்தியா திட்டத்தின் நிதியுதவியில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், கேலோ இந்தியா திட்ட நிதி உதவியில் துவக்க நிலை கால்பந்து பயிற்சி மையம், நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 100 வீரர் - வீராங்கனைகளுக்கு, தினசரி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், பயிற்சியாளர்களாக பணியாற்ற, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகள், அகில இந்திய பல்கலை போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், சீனியர் தேசிய போட்டிகளில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கோவையில் வசிப்பராக இருக்க வேண்டும் (குறைந்தது ஐந்து ஆண்டுகள்). பயிற்சியாளர்களுக்கு 11 மாதங்களுக்கு, மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது தற்காலிகமான பணியாகும்.

இதற்கான விண்ணப்பங்களை, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் (நேரு ஸ்டேடியம்) இருந்த பெற்றுக்கொண்டு, வரும், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சியாளர்களுக்கான நேர்முக தேர்வு நேரு ஸ்டேடியத்தில், வரும், 14ம் தேதி நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us