ADDED : பிப் 10, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 32 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 12,000 ரூபாய். தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இளநீர் தேவையும் கூடுதலாகிறது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இளநீர் வரத்து குறைந்துள்ளது.இனி வரக்கூடிய காலங்களில் இளநீர் வரத்து தொடர்ந்து கணிசமாக குறையும். அதேநேரம், விலை உயரும். எனவே, இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.
தவிர, கடந்த மாதம் போலவே சிவப்பு இளநீரின் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதன் காரணமாக, இதன் விலை கூடுதலாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.