sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

/

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


ADDED : மே 02, 2024 11:37 PM

Google News

ADDED : மே 02, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து, தண்ணீர் எடுக்க அனுமதிக்க கோரி, தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி நகரில் உள்ள தனியார் கிணற்றில் இருந்து, டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர். வறட்சியான கால கட்டத்தில், தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என, ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி மரப்பேட்டை, கோட்டூர் ரோடு பகுதிகளில், கிணறு, போர்வெல்களில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஆழியாறு ஆற்றுப்படுகையில் உள்ள கிணறுகளில் இருந்து அத்துமீறி தண்ணீர் எடுத்து, டேங்கர் லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நிலத்தடி நீரை உறிஞ்ச வேண்டாம் என, நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தண்ணீர் லாரி உரிமையாளர்கள், ஊஞ்சவேலாம்பட்டியில் லாரிகளை நிறுத்தி, நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்துறை அதிகாரிகள், நகரப்பகுதியில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும். தண்ணீர் எடுத்து சென்று, விவசாயிகளுக்கு தான் வினியோகம் செய்கிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், தொடர் போராட்டம் நடைபெறும் என, தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us