/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவிலில் மார்ச் 12ல் திருக்கல்யாணம்
/
மாரியம்மன் கோவிலில் மார்ச் 12ல் திருக்கல்யாணம்
ADDED : பிப் 25, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா நேற்று, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வரும், மார்ச், 4ம் தேதி, இரவு 7:00 மணிக்கு, கம்பம் நடப்படுகிறது. 11ம் தேதி, மாலை சக்தி கலசம் கொண்டு வருதல் மற்றும் பூவோடு எடுக்கப்படுகிறது.
வரும், 12ம் தேதி, காலை 4:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜைகள் நடக்கிறது. 14ம் தேதி, காலை சுவாமி திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, சுவாமிக்கு, அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது.

