sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முதல்வரின் தனிப்பிரிவு மனுவுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஆணையம் எச்சரிக்கை 

/

முதல்வரின் தனிப்பிரிவு மனுவுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஆணையம் எச்சரிக்கை 

முதல்வரின் தனிப்பிரிவு மனுவுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஆணையம் எச்சரிக்கை 

முதல்வரின் தனிப்பிரிவு மனுவுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஆணையம் எச்சரிக்கை 

1


ADDED : ஜூன் 12, 2024 11:35 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:35 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், மூன்று வாரத்துக்குள் பதிலளிக்காவிட்டால், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழகத்துக்கு, மாநில தகவல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக, கோவை வரை இயக்கப்படும் ஐந்து அரசு பஸ்களின் நேரத்தை, தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வருவாய் இல்லாத நேரத்துக்கு மாற்றியுள்ளனர்.

இதன் காரணமாக, தமிழக அரசுக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சத்து, 95 ஆயிரத்து, 850 ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என, அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் பாலதண்டபாணி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

அம்மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை அறிய, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.

இதற்கு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. இரண்டு முறை மேல்முறையீடு செய்தும் பதில் தராததால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.

மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் தலைமையில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது.

மனுதாரர் பாலதண்டபாணி ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பித்தார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், உதவி மேலாளர் கண்ணன் ஆஜரானார். போக்கு வரத்து கழகம் அளித்த தகவல்கள் முழுமையாக இல்லாததை, விசாரணையில் ஆணையம் கண்டுபிடித்தது.

இதையடுத்து, மனுதாரர் மற்றும் பொது தகவல் அலுவலர் ஆகியோரை, அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட மேலாண் இயக்குனர் அழைத்து, சம்பந்தப்பட்ட மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது, குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

அதன் அறிக்கை முழுமையான நகலில், 'தகவல் பெறும் உரிமை சட்டப்படி தகவல்கள் வழங்கப்படுகிறது' என்ற முத்திரையுடன் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டு, மூன்று வாரத்துக்குள் ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல் மூலமாக, மனுதாரருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டை நகல் மற்றும் அவருக்கு வழங்கிய தகவல் நகல் ஆகியவற்றை, ஆணையத்துக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மனுதாரருக்கு தகவல்களை வழங்க மறுக்கும் பட்சத்தில், தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 20(1)ன் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் பிரிவு 19(8) 9(பி)ன் கீழ் மனுதாரருக்கு, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us