sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறப்பு என்னாச்சு? ஆழியாறு விவசாயிகள் வேதனை

/

பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறப்பு என்னாச்சு? ஆழியாறு விவசாயிகள் வேதனை

பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறப்பு என்னாச்சு? ஆழியாறு விவசாயிகள் வேதனை

பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறப்பு என்னாச்சு? ஆழியாறு விவசாயிகள் வேதனை


ADDED : மே 30, 2024 11:50 PM

Google News

ADDED : மே 30, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு நாளை (ஜூன் 1ம் தேதி) தண்ணீர் திறப்பது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகாததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கன், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இருபோக சாகுபடிக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படாமல், நிலை பயிர்களை காப்பாற்ற மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவதற்கான அறிவிப்பு வரவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கூறியதாவது:

ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, ஒவ்வொரு ஆண்டும் மே 16ம் தேதியில் இருந்து, ஏப்., 15ம் தேதி வரை 11 மாதங்கள் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக அரசாணை பெற வேண்டும் எனக்கூறி பாசனத்தை தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால், தக்க பருவத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது.

கடந்தாண்டு இரண்டு போகமும் நெல் பயிரிட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தோம். கடந்த மே மாதம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், நீர்வளம், நில வளம் திட்ட பணிகள் நடைபெறுவதால், ஜூன் 1ம் தேதி முதல் அரசாணை பெற்று தண்ணீர் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இன்று வரை அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. விவசாயிகளுக்கும் எந்த தகவலும் இல்லை.

இந்தாண்டு மே மாதம் நல்ல மழை பெய்துள்ளதுடன், தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்க்கும் அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த பிறகும், தண்ணீர் கிடைக்குமா, கிடைக்காத என்ற குழப்பமான மனநிலை தான் உள்ளது. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தண்ணீரை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஜூன் மாதம், 2வது வாரத்தில் தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை பெற்றதும், தண்ணீர் திறக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us