sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எந்த படிப்புக்கு என்ன நுழைவுத்தேர்வு? மாணவர்கள் அறிந்து கொள்ள தெளிவான விளக்கம்

/

எந்த படிப்புக்கு என்ன நுழைவுத்தேர்வு? மாணவர்கள் அறிந்து கொள்ள தெளிவான விளக்கம்

எந்த படிப்புக்கு என்ன நுழைவுத்தேர்வு? மாணவர்கள் அறிந்து கொள்ள தெளிவான விளக்கம்

எந்த படிப்புக்கு என்ன நுழைவுத்தேர்வு? மாணவர்கள் அறிந்து கொள்ள தெளிவான விளக்கம்


ADDED : மார் 25, 2024 01:22 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கல்வியாளர் அஷ்வின் பேசியதாவது:

l தேசிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வினாத்தாள்களில், பாடக்கருத்துகள் அடிப்படையில், பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், வேகமாக முடிவெடுத்தல் குறித்த கேள்விகளே இடம்பெறுகின்றன. சிந்திக்கும் திறன் அடிப்படையில் தான், கேள்விகளை அணுக வேண்டும்.

l சி.யூ.இ.டி., தேர்வு எழுதினால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை பெறலாம். வேளாண் படிப்பில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு ஒதுக்குவதால், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

l ஆர்க்கிடெக்ட் படிக்க, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால், என்.ஐ.டி மற்றும், ஸ்கூல் ஆப் பிளானிங் ஆர்க்கிடெக்ட் கல்வி நிறுவனங்களில் சேரலாம்.

l நாட்டா நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தலைசிறந்த கல்விநிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை பெறலாம்.

l ராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு கிடைப்பதும் உறுதி. இதில், கலைப்பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம்.

l நேவி, ஏர்போர்ஸ் துறைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லுாரிகளில், இயற்பியல், வேதியியல், கணித பாடப்பிரிவு மாணவர்கள் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது.

l கணிதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள், சென்னை மேத்தமேட்டிக் இன்ஸ்டிட்யூஷனில் சேர்ந்தால், அதிக சம்பளத்துடன் ஜொலிக்கலாம்.

l நன்றாக படம் வரைபவர்கள், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைனில் சேர, பிரத்யேக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு நுழைவுத்தேர்வுகள் உள்ளன. இதற்கு திட்டமிட்டு படித்தால், நல்ல சம்பளத்துடன், உயர்ந்த பதவிகளில் வேலை கிடைப்பது உறுதி. இவ்வாறு, அவர் பேசினார்.

தெரிஞ்சுக்கணும்'

கல்வியாளர் அஷ்வின் பேசுகையில், ''இந்தியாவில் 23 ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் மொத்தமுள்ள, 17 ஆயிரத்து 320 இடங்களில், கடந்தாண்டு தமிழகத்தில் இருந்து வெறும், 545 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதேபோல், என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் மொத்தமுள்ள இடங்களில் ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து, சொற்ப மாணவர்களே சேருகின்றனர். இதற்கு காரணம், நுழைவுத்தேர்வு எழுத வேண்டுமென்ற விழிப்புணர்வு, குறைவாக இருப்பதே ஆகும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us