/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறகுப்பந்து போட்டியில் வெற்றியாளர்கள் யார், யார்?
/
இறகுப்பந்து போட்டியில் வெற்றியாளர்கள் யார், யார்?
ADDED : மே 13, 2024 12:28 AM
கோவை;நேரு கல்லுாரியில் நடந்த இறகுப்பந்து போட்டியில், பேராசிரியர்கள் அசத்தலாக விளையாடி கோப்பைகளை வென்றனர்.
நேரு கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள நேரு கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான போட்டி, நேரு கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில், நேரு கல்வி குழுமத்திற்கு உட்பட்ட 10 கல்லுாரிகளை சேர்ந்த சுமார் 100 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சனோஜ் முதலிடம், பைஜூ இரண்டாமிடம் பிடித்தனர். இரட்டையர் பிரிவில் அனிருதன் - ஜெயராமன் ஜோடி முதலிடம், வடிவேல் - மதன் ஜோடி இரண்டாமிடம் பிடித்தனர். 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் அனிருதன் முதலிடம், சிவக்குமார் இரண்டாமிடம் பிடித்தனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் மதன் - குல்ஜா முதலிடம், அனிருதன் - ஜெயபிரியா இரண்டாமிடம் பிடித்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் குல்ஜா முதலிடம், கார்த்திகா இரண்டாமிடம்; இரட்டையர் பிரிவில் ஜோதி - குல்ஜா ஜோடி முதலிடம், ஜெயபிரியா - விருந்தா இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற பேராசிரியர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.