sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேயராக யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு பரிந்துரைப்பதில் யாருக்கு செல்வாக்கு? புதிய மேயர் தேர்தல் அரசிதழில் வெளியீடு

/

மேயராக யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு பரிந்துரைப்பதில் யாருக்கு செல்வாக்கு? புதிய மேயர் தேர்தல் அரசிதழில் வெளியீடு

மேயராக யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு பரிந்துரைப்பதில் யாருக்கு செல்வாக்கு? புதிய மேயர் தேர்தல் அரசிதழில் வெளியீடு

மேயராக யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு பரிந்துரைப்பதில் யாருக்கு செல்வாக்கு? புதிய மேயர் தேர்தல் அரசிதழில் வெளியீடு


ADDED : ஜூலை 28, 2024 12:50 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகராட்சிக்கான ஆறாவது மேயர் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல், ஆக., 6ல் விக்டோரியா ஹாலில் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலராக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மேயர் தி.மு.க.,வை சேர்ந்த, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, கடந்த 3ம் தேதி மேயர் பதவியை மட்டும் ராஜினாமா செய்தார். புதிய மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடத்த, கலெக்டருக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியது.

அதன்படி, ஆக., 6ம் தேதி காலை, 10:30 மணிக்கு, விக்டோரியா ஹாலில் மறைமுகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தும் அலுவலராக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செல்வசுரபியை, கலெக்டர் கிராந்திகுமார் நியமித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, புதிய மேயர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டது.

யாருக்கு வாய்ப்பு?


2026 சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மேயரின் செயல்பாடு இருக்க வேண்டும். ஏனெனில், கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லுார் ஆகிய மூன்று தொகுதிகள், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, சூலுார் ஆகிய மூன்று தொகுதிகளில் சில பகுதிகள், மாநகராட்சி எல்லைக்குள் வருகின்றன.

அதனால், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு, 2026 சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்.

அதனால், மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதில், கட்சி மேலிட தலைவர்கள் பொறுமையாக இருக்கின்றனர்.

மேயர் பதவியை கைப்பற்ற மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் பலரும் முயற்சிக்கின்றனர்.

நகராட்சித்துறை அமைச்சரான நேரு, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான முத்துசாமி, கோவை லோக்சபா தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பரிந்துரைக்கும் கவுன்சிலர்களில் ஒருவர், மேயராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. எந்த அமைச்சருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது, மேயர் தேர்வில் தெரிந்து விடும்.






      Dinamalar
      Follow us