/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்மேகம் இல்லா காலத்தில் ஏன் பருக வேண்டும் 'மோர்'
/
கார்மேகம் இல்லா காலத்தில் ஏன் பருக வேண்டும் 'மோர்'
கார்மேகம் இல்லா காலத்தில் ஏன் பருக வேண்டும் 'மோர்'
கார்மேகம் இல்லா காலத்தில் ஏன் பருக வேண்டும் 'மோர்'
ADDED : ஏப் 06, 2024 08:00 PM
வெயில் காலத்தில், பொதுமக்களின் தாகத்தை தணிக்க, தன்னார்வ அமைப்புகள் பல, மோர் வழங்கி வருகின்றனர். இக்காலத்தில் மோர் பருகுவது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
மோர், தண்ணீரை விட அதிக நீர்ச்சத்து நிறைந்தது. கோடைகாலத்தில் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக நீர்ச்சத்து இழப்பு அதிகமாக இருக்கும்.
மோர் குடிப்பதன் வாயிலாக, நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தி, நீரிழப்பு மற்றும் சோர்வு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
மோர், புரதச்சத்து மற்றும் நொதிகள் நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளை தீர்க்க உதவுகிறது.
மோர், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற முக்கியமான எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தது.
வியர்வை காரணமாக இழக்கப்படும், எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுக்க உதவுகிறது. கால்சியம், வைட்டமின் 'பி 12' மற்றும் புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
உடல் வெப்பநிலையை குறைத்து, குளிர்ச்சியை தர உதவுகிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், முகப்பரு போன்ற பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.
குறைந்த கலோரிகள் நிறைந்தது. பசியை கட்டுப்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது. புதிதாக தயாரிக்கப்பட்ட மோர் குடிப்பது தான் நல்லது.
இதில், உப்பு, மிளகு, புதினா, இஞ்சி போன்றவற்றை சேர்த்து குடிக்கலாம். ஆனால், அதிகப்படியாக மோர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இதேபோல, வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகள், எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

