sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆசிரியர்கள் தேர்தல் பணியால் பள்ளிகள் திறப்பு தேதி மாறுமா?

/

ஆசிரியர்கள் தேர்தல் பணியால் பள்ளிகள் திறப்பு தேதி மாறுமா?

ஆசிரியர்கள் தேர்தல் பணியால் பள்ளிகள் திறப்பு தேதி மாறுமா?

ஆசிரியர்கள் தேர்தல் பணியால் பள்ளிகள் திறப்பு தேதி மாறுமா?


ADDED : ஏப் 24, 2024 09:47 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வு, இம்மாதம் 2ம் தேதி துவங்கியது. அதில், ஒன்று முதல் 3ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று, நான்கு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

பொதுவாக கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் ஒன்றாம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும். 1ம் தேதி சனிக்கிழமை என்பதால், 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஜூன் 4-ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அப்பணியிலும் ஆசிரியர்கள் ஈடுபடுவர் என்பதால் முதல் வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கான தகவல் அதிகாரப் பூர்வமாக பள்ளிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us