sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடு கட்டித்தர வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை

/

வீடு கட்டித்தர வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை

வீடு கட்டித்தர வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை

வீடு கட்டித்தர வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை


ADDED : செப் 06, 2024 02:40 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;வால்பாறை நகரை சுற்றிலும், 5 தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இதில் பெரும்பாலான எஸ்டேட்கள் நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, தேயிலை, மிளகு, காபி போன்றவை பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலங்களை தமிழக அரசின் சார்பில் மீண்டும் 'ரீ சர்வே' செய்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, அங்கு தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்பது, தொழிலாளர்களின், 50 ஆண்டுகால எதிர்பார்ப்பாக உள்ளது.

தொழிலாளர்கள் கூறுகையில், 'வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றின் அச்சுறுத்தலால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமலும், நிரந்தரமாக அங்கு வசிக்க முடியாமலும் தவிக்கின்றனர்.

வனவிலங்குகளுக்கு பயந்து, தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு, அங்கு தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us