நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மைக் கல்லுாரியில், நிறுவன தொடக்கத்திற்கான பணிமனை நடந்தது. கல்லுாரி இயக்குனர் பாலுசாமி தலைமை வகித்தார். என்.ஜி.எம்., கல்லுாரி பேராசிரியர் பூங்கொடி கலந்து கொண்டார்.
தொழிலில் வெற்றி பெற நிறுவன தொடக்கத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் அறிவு சார் சொத்துரிமைகள், காப்புரிமை, வடிவமைப்பு, நிர்வாக யுக்திகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பேராசிரியர்கள் தியாகு, வீரக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

