/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஜீவன் ரக் ஷா' விருது பெற 28க்குள் விண்ணப்பிக்கலாம்
/
'ஜீவன் ரக் ஷா' விருது பெற 28க்குள் விண்ணப்பிக்கலாம்
'ஜீவன் ரக் ஷா' விருது பெற 28க்குள் விண்ணப்பிக்கலாம்
'ஜீவன் ரக் ஷா' விருது பெற 28க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 03, 2024 12:26 AM
பொள்ளாச்சி:நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின் விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு, மனித உயிர்களை மீட்பவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் 'ஜீவன் ரக் ஷா' பதக்க விருது வழங்கப்படுகிறது.
சர்வோட்டம் ஜீவன் ரக் ஷா பதக்கம் என்பது, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
உத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கம் என்பது, துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை, போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜீவன் ரக் ஷா பதக்கம் என்பது, தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி, உயிரை காப்பாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024ம் ஆண்டுக்கான ஜீவன் ரக் ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் இதர விபரங்களை, https://awards.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களின் மூன்று நகல்களை, ஜூன் 28ம் தேதி மாலை, 4:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென,கோவைகலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

