/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் குறைவு
/
இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் குறைவு
ADDED : ஜூலை 01, 2024 12:37 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இளநீரின் தரமும், கடந்த மாதங்களில் நிலவிய கடுமையான வெயிலின் காரணமாக குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, நமது பகுதியில் வரும் இளநீரை, வட மாநில வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர்.
இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு, 38 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு டன் இளநீரின் விலை, 15,250 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.