ADDED : மார் 14, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடை பெரியபுதுார் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்,19. இவரும் இவரது உறவினர்களான ராஜாத்தி,31, கோகிலா, 24, சத்யா, 32, ஆகியோர் நேற்று அதிகாலை காரமடை கரியாம்பாளையம் சாலையில் உள்ள தனியார் வே பிரிட்ஜ் அருகே சென்ற போது, ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். காரமடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.