/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதம் சார்ந்த பதிவு யூ டியூபர் மீது வழக்கு
/
மதம் சார்ந்த பதிவு யூ டியூபர் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2024 08:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: வெள்ளலூர், கருப்பண்ண பிள்ளை வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார், 42; இவர் கடந்த மார்ச் மாதம், முகில் என்பவரின் பேஸ்புக் பதிவை பார்த்தார்.
அதில் இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் மற்றும் மத நம்பிக்கைக்கு எதிரான வாக்கியங்கள் காணப்பட்டன. இதுகுறித்து நேற்று முன்தினம், ராஜ்குமார் போத்தனூர் போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், முகிலை தேடுகின்றனர்.