/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரக்கு ஆட்டோ லாரி மோதல்10 பேர் காயம்
/
சரக்கு ஆட்டோ லாரி மோதல்10 பேர் காயம்
ADDED : அக் 23, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்: சுல்தான்பேட்டை அருகே லாரியும், சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில், 10 பேர் காயமடைந்தனர்.
பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சித்தநாயக்கன்பாளையம் வழியாக நேற்று முன்தினம் இரவு சரக்கு ஆட்டோ சென்றது.
அப்போது, பல்லடம் நோக்கி சென்ற லாரி ஆட்டோ மீது மோதியது.
இதில் சரக்கு ஆட்டோவில் பயணித்த, 10 பேர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.
இவ்விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின் றனர்.

