sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

10 ஆண்டு சிறை தண்டனை  பெற்று ஜாமினில் வந்தவர்  மீண்டும் கைது

/

10 ஆண்டு சிறை தண்டனை  பெற்று ஜாமினில் வந்தவர்  மீண்டும் கைது

10 ஆண்டு சிறை தண்டனை  பெற்று ஜாமினில் வந்தவர்  மீண்டும் கைது

10 ஆண்டு சிறை தண்டனை  பெற்று ஜாமினில் வந்தவர்  மீண்டும் கைது


ADDED : அக் 16, 2024 11:00 PM

Google News

ADDED : அக் 16, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை, ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த, 'கோவை லேன்ட் பேங்கர்ஸ் ' என்ற நிதி நிறுவனம், 94 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவில், குற்றம்சாட்டப்பட்ட அந்நிறுவன உரிமையாளர் முத்துக்குமாருக்கு, 2022ல், 10 ஆண்டு சிறை தண்டனை, 94 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமார், ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த ஐகோர்ட், 94 லட்சம் ரூபாய் அபராத தொகையினை மூன்று மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து, ஜாமின் வழங்கியது.

ஆனால், நிபந்தனைபடி அபராத தொகையினை செலுத்தவில்லை. இதனால் அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முத்துக்குமாரை கைது செய்து, கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us