/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
101 மதுபாட்டில்கள் பறிமுதல்: மூவர் கைது
/
101 மதுபாட்டில்கள் பறிமுதல்: மூவர் கைது
ADDED : பிப் 13, 2024 11:36 PM
நெகமம்:நெகமம் சுற்று வட்டார பகுதியில், மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெகமம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், நெகமம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், வடசித்துார் டாஸ்மாக் அருகே, புதுக்கோட்டையை சேர்ந்த சூர்யா, 23, என்பவர் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து 58 மது பாட்டில்கள் மற்றும் 4,470 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
இதேபோன்று, பனப்பட்டி டாஸ்மாக் அருகே, புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்தன், 22, என்பவரிடம் இருந்து, 5 மது பாட்டில்கள் மற்றும் காட்டம்பட்டி டாஸ்மாக் அருகே, தூத்துக்குடியை சேர்ந்த பேச்சிராஜா, 38, என்பவரிடம் இருந்து, 38 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
மது விற்பனை செய்த மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம், 102 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

