ADDED : ஏப் 29, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:
கோவை, குனியமுத்தூர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம். இவருக்கு கறிவேப்பிலை தோட்டம், ஸ்ரீராம் நகரிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இவரது தனிப்படையினர் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். 1.1 கி. கிராம் கஞ்சா விற்பனைக்காக, பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், அவ்வீட்டில் வசிக்கும் ஹக்கீம், 47 என்பவரை கைது செய்தனர். குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

