sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் குறைதீர் முகாமில் 117 மனுக்களுக்கு தீர்வு

/

போலீஸ் குறைதீர் முகாமில் 117 மனுக்களுக்கு தீர்வு

போலீஸ் குறைதீர் முகாமில் 117 மனுக்களுக்கு தீர்வு

போலீஸ் குறைதீர் முகாமில் 117 மனுக்களுக்கு தீர்வு


ADDED : ஜூன் 19, 2025 05:20 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர் கோவை மாவட்ட போலீசார் சார்பில், பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணும் வகையில், வாரந்தோறும், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, காருண்யா நகர், பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, கே.ஜி. சாவடி, பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய, 8 போலீஸ் ஸ்டேஷன்களில் வரப்பெற்ற, அனைத்து விதமான மனுக்களுக்கும், ஒரே இடத்தில் தீர்வு காணும் வகையில், பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட குறை தீர்ப்பு முகாம், நேற்று பேரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. எஸ்.பி., கார்த்திகேயன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இம்முகாமில், நிலம் தொடர்பான பிரச்னை, தகராறு என, மொத்தம், 117 மனுக்கள் பெறப்பட்டன.

இதில், பெறப்பட்ட மனுக்களின் மீது சி.எஸ்.ஆர்., பதிவு செய்யப்பட்டு, இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. பேரூர் டி.எஸ்.பி., சிவக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் ஆகியோர், பொதுமக்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி, தீர்வு கண்டனர்.






      Dinamalar
      Follow us