ADDED : ஜூன் 10, 2026 06:21 AM

அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: இக்கரை போளுவாம்பட்டி, ஏழு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன். வாய்க்காலை ஒட்டி இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று தோட்டத்துக்குள், 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வந்தது. வனத்துறையினர் பாம்பை மீட்டு, சிறுவாணி அடிவார வனப்பகுதியில் விடுவித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால், வாய்க்கால் நீர் வழியாக, வனத்தில் இருந்து மலைப்பாம்பு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
