sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக நலனுக்காக பட்டீசனுக்கு 1,300 கிலோ மலர் வழிபாடு

/

உலக நலனுக்காக பட்டீசனுக்கு 1,300 கிலோ மலர் வழிபாடு

உலக நலனுக்காக பட்டீசனுக்கு 1,300 கிலோ மலர் வழிபாடு

உலக நலனுக்காக பட்டீசனுக்கு 1,300 கிலோ மலர் வழிபாடு


ADDED : மே 02, 2025 06:57 AM

Google News

ADDED : மே 02, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பேரூர் பட்டி நாயகர் சைவநெறி அறக்கட்டளை சார்பில், 1,300 கிலோ மலர் கொண்டு, பட்டீசனுக்கு மலர் வழிபாடு நடத்தப்பட்டது.

பேரூர் பட்டிநாயகர் சைவநெறி அறக்கட்டளை சார்பில், 30 ஆண்டுகளாக, தமிழ் ஆண்டின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில், உலக நலன் வேண்டி, பட்டீசனுக்கு மலர் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டும், உலக நலன் வேண்டி, மலர் வழிபாடு நேற்று நடந்தது.

கொங்கு வேளாளர் மடத்தில் இருந்து, 1,300 கிலோ எடையுள்ள, மல்லி, செண்பகம், தாமரை, அரளி, பிச்சி, சம்பங்கி, வில்வம், நொச்சி, வன்னி, விளா என, 48 வகையான மலர்கள் மற்றும் இலைகளை, பக்தர்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

அதன்பின், பேரூர் பட்டீஸ்வரருக்கு, அர்த்தசாம பூஜையின்போது, மலர்களை கொண்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில், ஏராளாமான சிவபக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us