sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொங்கலுக்காக 1.78 லட்சம் பயணிகள் சொந்த ஊர் பயணம்

/

பொங்கலுக்காக 1.78 லட்சம் பயணிகள் சொந்த ஊர் பயணம்

பொங்கலுக்காக 1.78 லட்சம் பயணிகள் சொந்த ஊர் பயணம்

பொங்கலுக்காக 1.78 லட்சம் பயணிகள் சொந்த ஊர் பயணம்


ADDED : ஜன 16, 2025 11:56 PM

Google News

ADDED : ஜன 16, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பொங்கலையொட்டி கோவை மண்டலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் வாயிலாக, 1.78 லட்சம் பயணிகள் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக பல்வேறு பகுதிகளுக்கும், 1,520 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவை மண்டலத்தில் இருந்து, 850 பஸ்கள் இயக்கப்பட்டன. இச்சிறப்பு பஸ்கள் வாயிலாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். கடந்த, 12ம் தேதி முதல், 15 ம் தேதி வரையில், பயணிகளின் வசதிக்காக கோவை மண்டலத்தில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோவை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, மதுரை, தேனி, மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும், சூலுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கரூர், திருச்சி வழியாக செல்லும் பஸ்களும், காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், வழியாக செல்லும் பஸ்களும், மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து குன்னுார், ஊட்டி, கூடலுார், கோத்தகிரி செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டன.

இந்நிலையில், இச்சிறப்பு பஸ்கள் வாயிலாக, 1.78 லட்சம் பயணிகள் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us