/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு கல்லுாரியில் 19வது பட்டமளிப்பு
/
நேரு கல்லுாரியில் 19வது பட்டமளிப்பு
ADDED : பிப் 14, 2026 05:19 AM

குனியமுத்துார்: குனியமுத்துார், நேரு விமானவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்லுாரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான, 19வது பட்டமளிப்பு விழா நடந்தது.
நேரு கல்வி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் பேசுகையில், '' தமிழ்நாட்டிலேயே விமானவியல் துறையில், 58 வருடங்களைக் கடந்து இன்றும் பல சாதனையாளர்களை உருவாக்குவதில் நேரு கல்வி குழுமம் முதன்மை பங்காற்றுவதில் பெருமை கொள்கிறது,'' என்றார்.
காருண்யா தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தர் எலையா பிளஸ்சிங், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
நேரு கல்வி குழும நிறுவனங்களின் செயல் இயக்குனர் நாகராஜா, முதல்வர் பாலாஜி, இளங்கலை துறைத் தலைவர் சிங்காரவடிவேலு, முதுகலைத் துறைத் தலைவர் மல்லிகா பங்கேற்றனர்.

