sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலம் வாங்குவதாக அழைத்துச்சென்று இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி

/

நிலம் வாங்குவதாக அழைத்துச்சென்று இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி

நிலம் வாங்குவதாக அழைத்துச்சென்று இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி

நிலம் வாங்குவதாக அழைத்துச்சென்று இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி

1


ADDED : அக் 19, 2024 06:41 AM

Google News

ADDED : அக் 19, 2024 06:41 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : இரிடியம் தருவதாக ரூ. 2 கோடி மோசடி செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூவர் குறித்து விசாரிக்கின்றனர்.

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ், 55. இவருக்கு சொந்தமான நிலம் மண்ணார்காடு பகுதியில் உள்ளது. அதை விற்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அபுபக்கர், 48 என்பவர் அப்துல் அஜீஸ் வீட்டுக்கு சென்று, தன்னை ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். கோவையில் உள்ள சிலர், அஜீசின் நிலத்தை வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து, அஜீஸ் கோவை வந்தார். அபுபக்கர், நண்பர்கள் ஐந்து பேரை சந்தித்து பேசினார். அப்போது, அவர்களில் ஒருவரான ஜான் பீட்டர், தன்னிடம் இரிடியம் இருப்பதாக தெரிவித்தார். அதை வாங்கி விற்றால், ரூ.10 கோடிக்கு மேல் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அபுபக்கர் மற்றும் ஜான் பீட்டர் ஆகியோரை சந்தித்து, ரூ. 2 கோடி பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற அவர்கள் இரிடியத்தை தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இச்சம்பவம் குறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், உடுமலையை சேர்ந்த அனில் குமார், 30, ஜோதிராஜ், 34, ஊட்டியை சேர்ந்த உத்தமன், 45 மற்றம் கோவையை சேர்ந்த சசிகுமார், 47 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மூவர் குறித்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us