sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

20 கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை

/

20 கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை

20 கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை

20 கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை


ADDED : ஏப் 03, 2025 05:37 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா என, கோவை மாவட்டத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், 20 கடைகளில் மட்டும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கண்டறியப்பட்டது.

கோவை மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படுகின்றன. அரசு நிர்ணயித்துள்ள தொகையை காட்டிலும் பாட்டிலுக்கு, 10 ரூபாய் வீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது; சில கடைகளில், 20 ரூபாய் வரை வசூலிப்பதால், மதுபானம் வாங்குவோர் அதிருப்தி அடைகின்றனர்.

இச்சூழலில், நாமக்கல் மாவட்ட 'டாஸ்மாக்' மேலாளர் கனகமாணிக்கம் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் ஆய்வுக்கு வந்தனர்.

மாவட்டம் முழுவதும், 50 கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், 20 கடைகளில் மட்டும் கூடுதல் விலைக்கு, மதுபானங்கள் விற்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.

அக்கடை ஊழியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர். அதே கடைகளில், சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் (பார்) செயல்பட்டு வருகின்றன.

அவற்றை அதிகாரிகள் நேரில் பார்த்தபோதிலும், அதுதொடர்பாக, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சட்ட விரோதமாக 'பார்'

'டாஸ்மாக்' ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு, மதுபானம் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. கூடுதல் விலைக்கு விற்ற கடைகளில், சட்ட விரோதமாக 'பார்' செயல்படுகின்றன; அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அரசுக்கு பணம் செலுத்தாமல், 120 'பார்'கள் நடத்தப்படுகின்றன. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொகை செலுத்தி விட்டு, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்காமல், 'பார்'கள் நடத்தப்படுகின்றன. அதுகுறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது' என்றனர்.








      Dinamalar
      Follow us