sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துாய்மை பணியில் 210 பணியாளர்கள்

/

துாய்மை பணியில் 210 பணியாளர்கள்

துாய்மை பணியில் 210 பணியாளர்கள்

துாய்மை பணியில் 210 பணியாளர்கள்


ADDED : பிப் 22, 2024 11:40 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;''காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், நகரை துாய்மையாக வைக்கவும், 210 பணியாளர்கள், துாய்மைப் பணியில் ஈடுபடுவர்,'' என, நகராட்சி கமிஷனர் மனோகரன் தெரிவித்தார்.

காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நாளை, தேரோட்டம், 25ம் தேதி தண்ணீர் மற்றும் பந்த சேவை நடக்கின்றன.

திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து, காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன், தலைவர் உஷா வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:

காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி வழங்க, 10 இடங்களில் குடிநீர் தொட்டி வைக்கப்படும்.

அனைத்து தொட்டிகளுக்கும், லாரிகள் வாயிலாக குடிநீர் வசதி செய்யப்படும். தேர் செல்லும் வீதிகள் மற்றும் நகரில் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படும்.

தற்காலிகமாக ஐந்து இடங்களில், ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக மொபைல் கழிப்பிடங்கள் வைக்கப்படும். நகரில் சேகரமாகும் குப்பை சேகரிக்க, தற்போதுள்ள வாகனத்துடன், மேலும் கூடுதலாக 5 வாகனங்கள், 24 மணி நேரமும் செயல்படும்.

காரமடை, மேட்டுப்பாளையம், கூடலுார், வால்பாறை, தாராபுரம் ஆகிய நகராட்சிகளை சேர்ந்த, 210 துாய்மை பணியாளர்கள், நகரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவர். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதை அடுத்து, பக்தர்கள் தங்க, மூன்று இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நகரில் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து அடிக்கப்படும். அடிப்படை வசதிகளில் குறைபாடுகள், குடிநீர் பற்றாக்குறை இருப்பின், 91503 75570 என்ற மொபைல் போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us