sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இடைநின்ற 23 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

/

இடைநின்ற 23 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

இடைநின்ற 23 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

இடைநின்ற 23 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு


ADDED : டிச 07, 2024 06:17 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; இடைநின்ற, 23 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

மாவட்ட கல்வி ஆய்வுக்கூட்டம் கடந்த நவ., 28ம் தேதி நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாணவர்கள் வருகை சராசரி குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டது.

இதன்படி, கோவை மாநகராட்சி குறிச்சி ஆரம்பப்பள்ளியில், ஒன்பது மாணவர்கள் இடைநின்றது தெரிந்தது. விசாரணையில், மாணவர்கள் குறிச்சியில் இருந்து கந்தசாமி நகர் பகுதிக்கு குடிபெயர்ந்தது தெரிந்தது.

அவர்களை விசாரிக்க சென்ற போது, அப்பகுதியில் மேலும், 14 பேர் பள்ளியில் சேராமல் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி, 23 பேரும் மாநகராட்சி கந்தசாமி நகர் ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us