/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
247வது வாரமாக குளத்தில் களப்பணி
/
247வது வாரமாக குளத்தில் களப்பணி
ADDED : அக் 14, 2024 11:28 PM
கோவில்பாளையம் : எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், குளங்களில் களப்பணி நடந்தது.
கோவில்பாளையம் அருகே, 160 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்ரஹார சாமக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கவுசிகா நீர்க் கரங்கள் மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று களப்பணி செய்யப்படுகிறது. 218வது வாரமாக நேற்றுமுன்தினம் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை களப்பணி நடந்தது.
கோவில்பாளையம் அருகே, 125 ஏக்கர் பரப்பளவு உள்ள காளிங்கராயன் குளத்தில், 247வது வாரமாக மரக்கன்றுகளை சுற்றி இருந்த களைகள் அகற்றப்பட்டன. தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தூய்மை பணி நடைபெற்றது. இதையடுத்து ஆயுத பூஜை நடைபெற்றது. வையம்பாளையம் அருகே உள்ள தடுப்பணையில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் களப்பணியில் ஈடுபட்டனர்.
அன்னூர் அருகே எல்லப்பாளையம் பிரிவில் உள்ள 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரங்குளத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

