ADDED : ஜூலை 18, 2025 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள், கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து, காரமடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பல்வேறு பகுதிகளில் கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 25 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-----