sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 26 மனுக்கள்

/

பேரூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 26 மனுக்கள்

பேரூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 26 மனுக்கள்

பேரூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 26 மனுக்கள்


ADDED : மே 21, 2025 12:11 AM

Google News

ADDED : மே 21, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர், ;பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, 24 வருவாய் கிராமங்களுக்கும், ஜமாபந்தி, பேரூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று துவங்கியது.

நேற்று காலை, 10:00 மணி முதல் மாலை வரை, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட கலால் மேற்பார்வை அலுவலர் சிவகுமாரி மற்றும் பேரூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டனர்.

முதல் நாளான நேற்று, ஆலாந்துறை உள்வட்டத்திற்குட்பட்ட ஆலாந்துறை, பூலுவபட்டி, மத்வராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி, செம்மேடு ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

நேற்றைய முகாமில், இலவச பட்டா வழங்கக்கோரியும், உதவித்தொகை வழங்கக்கோரியும், வாரிசு சான்றிதழ் வழங்க கோரியும், நில அளவை செய்யக்கோரியும் மொத்தம், 26 மனுக்கள் பெறப்பட்டன. இன்று மாதம்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.






      Dinamalar
      Follow us