ADDED : அக் 29, 2024 08:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: முதல்வர் கோப்பைக்கான மாநில தடகளப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், பொள்ளாச்சி எஸ்.டி.சி., மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். அதன்படி, மாணவி கவுசல்யா, 100 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார்.
12.09 விநாடிகளில், இலக்கு துாரத்தை எட்டி, இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு, 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இவரை, கல்லுாரித்தலைவர் சேதுபதி, துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி, உடற்கல்வி இயக்குநர் பாரதி, பயிற்சியாளர் கண்ணன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.

