ADDED : ஜன 09, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய நாட்டு நல பணித் திட்டம் மற்றும் நெகமம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. என்.சி.சி., அலுவலர் குணப்பிரியன் அனைவரையும் வரவேற்றார்.
இதில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, ரத்ததானம் செய்தனர். மாணவர்களை, கல்லுாரி தாளாளர் மகேந்திரன், கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா, கல்லுாரி முதல்வர் கண்ணன், பேராசிரியர்கள் அனைவரும், ரத்த தானம் வழங்கிய மாணவர்களை பாராட்டினர்.