sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புகையிலை பொருள் விற்பனை தடுக்க 306 கடைகளில் சோதனை

/

புகையிலை பொருள் விற்பனை தடுக்க 306 கடைகளில் சோதனை

புகையிலை பொருள் விற்பனை தடுக்க 306 கடைகளில் சோதனை

புகையிலை பொருள் விற்பனை தடுக்க 306 கடைகளில் சோதனை


ADDED : ஏப் 21, 2025 04:38 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின்பேரில், 59 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும், 306 கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சட்டத்திற்கு விரோதமாக, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த, 22 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, காவல்துறையினர் சீல் வைத்தனர்.

சுமார் 46 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, நேற்று ஒரே நாளில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி வளாகங்களுக்குஅருகில் உள்ள, பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தனித்தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தனர்.

பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகே, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என, எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981 -81212 மற்றும் வாட்ஸ் ஆப்: 77081- 00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.






      Dinamalar
      Follow us