/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் 35 மி.மீ., மழை பதிவு
/
சிறுவாணியில் 35 மி.மீ., மழை பதிவு
ADDED : அக் 19, 2025 09:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் இந்த அணைப்பகுதியில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 35 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 22 மி.மீ., மழையும் பதிவாகியது.
அணையின் நீர் மட்டமானது, 36.74 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 9.7 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.