sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்புகள்: நிம்மதியிழந்து தவிக்கும் மக்கள்

/

ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்புகள்: நிம்மதியிழந்து தவிக்கும் மக்கள்

ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்புகள்: நிம்மதியிழந்து தவிக்கும் மக்கள்

ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்புகள்: நிம்மதியிழந்து தவிக்கும் மக்கள்


ADDED : அக் 19, 2025 09:15 PM

Google News

ADDED : அக் 19, 2025 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில், அனைத்து வாகனங்களும் பொள்ளாச்சி ரோட்டில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபக்கமும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன.

மேலும், ரோட்டில் சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மக்கள் ரோட்டில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையில், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. இதனால், எஸ்டேட் பகுதி மக்கள் வால்பாறை நகருக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், வால்பாறையில் ரோட்டை ஆக்கிரமித்து அதிக அளவில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும் நிலையில், ரோட்டோர ஆக்கிரமிப்பால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரோட்டை ஆக்கிமிரத்து வைக்கப்பட்டுள்ள கடைகளை, அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். இதே போன்று வால்பாறை மார்க்கெட் செல்லும் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும். இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us