ADDED : ஏப் 29, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்,; துடியலூர் அருகே காரில் குட்கா பொருள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரு காரில், விற்பனைக்காக, 387 கிலோ எடையுள்ள குட்கா பொருள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கார் டிரைவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத்தை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்து தப்பி ஓடிய, அதே மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் சவுத்ரியை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

