ADDED : மார் 21, 2024 01:31 AM
அ நிறம் | அளவு
கோவை:கோவை, தெலுங்குபாளையம் அருகே உள்ள மில் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 53, ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவரது மனைவி விசித்ரா, 46.
மகள் ஸ்ரீநிதி, 22 மற்றும் ஜெயநிதி, 14. தொழில் தேவைகளுக்காகராமச்சந்திரன் நிறைய கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.
நேற்று ராமச்சந்திரன் வீட்டிற்கு அவரது அக்கா ராணி சென்ற போது, நான்கு பேரும் விஷம் அருந்தி இறந்து கிடந்தனர். தகவல் அறிந்த போலீசார், உடல்களை மீட்டு விசாரிக்கின்றனர்.
